கொழும்பில் அமுலாக இருக்கும் விசேட போக்குவரத்து திட்டம்!

இலங்கையில் எதிர்வரும் சுதந்திர தின விழா நடைபெறவுள்ள பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு பிரதேசத்தைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளன. இந்த தினத்தில் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பல வீதிகளின் போக்குவரத்து நிறுத்தப்படும் என மேல் மாகாண போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.